#குரோம்பேட்டை: அரசு பேருந்து மோதி விபத்து - 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்காசியில் இருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சிக்னலில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து மீது எதிர்பாராதவிதமாக திடீரென்று அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஓட்டுநர், காலில் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 injured in bus collision in chromepet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->