வன்னியர் இடஒதுக்கீடு : விசாரணையை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதே சமயத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்த அத்தனை பேரும் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கக்கூடாது என்றும், பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், இருதரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 3000 பக்கம் அடங்கிய வாதங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், சில ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்க்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், எக்காரணம் கொண்டும் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க அவசாகம் கோரக்கூடாது என்றும், வருகின்ற 15 மற்றும் 16-ந்தேதிகளில் விசாரணை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanniyar reservation case feb 15


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->