#Breaking : ரஜினியின் ஆலோசனை கூட்டம் முடிந்தது.! இன்னும் சற்று நேரத்தில் வெளியாகப்போகும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். தற்போது ரஜினி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் ரஜினி சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் மன்றத்தின் ஒரு சில மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அதேபோல் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்துக்களையெல்லாம் கேட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகள் இடையே சில கருத்துக்களை தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. ராகவேந்திரா மண்டபம் வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் கையசைத்து உற்சாக படுத்தினார். பின்னர் வீடு திரும்பினார். செய்தியாளர் சந்திப்பு ஏதும் நடத்தவில்லை.

இன்னும் சற்று நேரத்தில் நடிகர் ரஜினியின் முடிவு குறித்து அறிக்கை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini meeting end


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->