வெளியாகுமா தீர்ப்பு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி! தாக்கல் செய்ய போகும் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,  பொது குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி அதிமுக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியம், பொதுச்செயலாளர் பதவி தேர்தலை தடை செய்ய கோரியும் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை அவசர வழக்காக கடந்த 22ஆம் தேதி விசாரணை செய்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு தீர்ப்பை இன்று தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைப்பில் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஓ பன்னீர்செல்வதற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ஓபிஎஸ் தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே பொதுச்செயலாளர் தேர்தல் தடை கூறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற இன்று 24 ஆம் தேதி இன்று வரை பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS EPS Case Chennai HC 24032023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->