ரெயிலுக்கு காத்திருந்த சிறுமிகளிடம் அத்து மீறிய டூப்ளிகேட் போலீஸ் - 2 பேர் கைது.!!
two peoples arrested for harassment in jarkant
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மாவட்டத்தை சேர்ந்த பதினாறு வயது சிறுமியும், அவரது தங்கையும் நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் செல்வதற்காக டால்டன்கஞ்ச் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு சிறுமிகளின் பெயர் மற்றும் விவரங்களை கேட்டு அவர்களை விசாரணை என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் சேர்ந்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இரண்டு சிறுமிகளையும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மெத்னிநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தங்கை, செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். சிறிது நேரத்திலேயே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for harassment in jarkant