நெற்றியில் குங்குமம் வைத்த மாப்பிள்ளை... தாலி கட்ட சில நொடிகளே இருக்க... நடந்த சோகம்.! திடுக் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமணத்தின்போது தாலி கட்டுவதற்கு சற்று முன்பாக மணமகன் மரணம் அடைந்துள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பீகார் மாநிலத்தின் பகல்பூரில்  நடைபெற்ற திருமணத்தின் போது தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சார்ந்த வினித் மற்றும் ஆயுசி ஆகியோருக்கு பெற்றோர்கள் திருமணத்திற்கு நிச்சயம் செய்திருந்தனர்.

இந்த இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் என்று நடைபெற்றது. இரு குடும்பத்தின் உறவினர்களும் வருகை புரிந்த நிலையில் திருமணத்திற்கு முன்பான அனைத்து சடங்குகளும்  நடைபெற்ற நிலையில் மணப் பெண்ணின் நெற்றியில் மணமகன் குங்குமிட்டார்.

இதன் பிறகு சில வினாடிகளில் மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அருகிலிருந்து பார்த்த மணப்பெண்ணும் மயங்கி விழுந்தார். திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில் தாலி கட்டுவதற்கு முன்பு  மணமகன் மரணமடைந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் கண்ணீர் விட்டு அழச் செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy happened in front of bride eyes in Bihar state


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->