கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.!
Maharashtra Road Accident family members 4 persons died
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காவாவிலி பகுதியில் இருந்து, அங்குள்ள கோலாப்பூர் நோக்கி அரசு பேருந்து பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்து அங்குள்ள காகணபாவடா சாலை அடூர் கிராமம் அருகே வந்துள்ளது.
இதன்போது எதிர்த்திசையில் வந்த காரின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பூஜா மால்வே (வயது 36), சஞ்சய் மால்வே (வயது 43), கிரண் மால்வே (வயது 24), அல்காத்தி மால்வே (வயது 60) ஆகிய நால்வரும் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த 3 பேர் உயிருக்கு போராடி துடிக்கவே, தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தினை சார்ந்த நால்வரும் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தவே, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கர்வீர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra Road Accident family members 4 persons died