கை, காலில் கட்டு! கட்டிய கணவனை தோளில் தூக்கிக்கொண்டு, நீதி கேட்டு எஸ்.பி.அலுவலகம் வந்த பெண்!
Madhya Pradesh Lady Complaint SP Office For Husband
தனது கணவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காயமடைந்த கணவனை தோளில் தூக்கிக்கொண்டு எஸ்.பி.அலுவலகம் வந்த பெண்ணின் காணொளி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் சோஹாக்பூர் பகுதியில் ஹரி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெனட்லால் யாதவ்.
கூலித் தொழிலாளியான ஜெனட்லால் சம்பவம் நடந்த அன்று எப்போதும் போல பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் சரமாரியாக தாக்கி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ஜெனட்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் மனைவி ராணி யாதவ், சோஹாக்பூர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
உடனடியாக போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகள் விபின் யாதவ், கம்லி யாதவ் மற்றும் தினேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தனது கணவரை தோளில் சுமந்துகொண்டு ஷாஹ்டோலில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு சென்ற ராணி யாதவ், தனது கணவருக்கு நீதி வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
English Summary
Madhya Pradesh Lady Complaint SP Office For Husband