எல்லை பாதுகாப்பு - 18ம் தேதி விண்ணில் பாயும் ரிசார்ட்-1பி செயற்கைகோள்.!!
risat 1b satelite launched coming 18
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த அதிரடி தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதல் தற்போது பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க 18ம் தேதி ரிசார்ட்-1பி செயற்கைக்கோளை இந்தியா ஏவ உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ரிசாட் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.
English Summary
risat 1b satelite launched coming 18