ஆந்திர மாநில சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.! 11 பேர் நிலை என்ன?
5 karnataka people died in road accident in AndhraPradesh
கர்நாடக மாநிலம் பெல்கமை சேர்ந்த 16 பேர் வேன் மூலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் வழிபட சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பிய போது ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெந்தம்பள்ளி அருகே எதிரே வந்த லாரி மீது அவர்கள் பயணம் செய்த வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
5 karnataka people died in road accident in AndhraPradesh