பிரபல இயக்குநர் திடீர் மறைவு! முதியோர் இல்லத்தில் பிரிந்த உயிர்! சோகத்தில் திரையுலகம்!
kerala director kg george death
மலையாள திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 77.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தவர் இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் (குளக்கட்டில் கீவர்கீஸ் ஜார்ஜ்).
புனே திரைப்படக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த கே.ஜி.ஜார்ஜ், இயக்குநர் ராம் கரியத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பின், 1975ஆம் ஆண்டு ‘ஸ்வப்னதானம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.ஜி.ஜார்ஜ்.
முதல் படமே சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றதால், புகழின் உச்சிக்கே சென்றார்.

தொடர்ந்து ‘ஊழ்க்கடல்’ (1979), ‘மேளா (1980), ‘யவனிகா’ (1982), ’லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ (1983) ஆகிய படங்களை இயக்கி, பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
மொத்தமாக 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார். மேலும், மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பு நிறுவி அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த கே.ஜி.ஜார்ஜ், இன்று உயிரிழந்தார்.
தனது கடைசி காலத்தை கொச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் கழித்துவந்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் அங்கயே தனது உயிரையும் விட்டுள்ளார்.
இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
kerala director kg george death