ஐரோப்பிய பயணம்... "உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு" கிடைத்துள்ளது - ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதில் இத்தாலி, வாடிகான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மற்றும் கடைசியாக இங்கிலாந்து சென்ற உக்ரைன் அதிபர் அந்தந்த நாட்டின் தலைவர்களை சந்தித்து போரின் போக்கை மாற்றுவது குறித்து விவாதித்துள்ளார். மேலும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் சந்திப்பிற்கு பின், உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வழங்க இங்கிலாந்து உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் திரும்பிய ஜெலன்ஸ்கி, கீவ் நகரத்திற்கு செல்லும் பொழுது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐரோப்பிய பயணத்தின் பொழுது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அரசியல் ஆதரவும், உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says Ukraine people got protection from European visit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->