பாக்முட் நகரிலிருந்து பின்வாங்கப்போவதில்லை - ஜெலன்ஸ்கி உறுதி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல், தற்போது ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்கரனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் டொனெட்ஸ்க் நகரங்களை கைப்பற்ற பாக்முட் நகரம் உதவியாக இருக்கும் என்பதால் அப்பகுதியின் நாலாபுறமும் சூழ்ந்து ரஷ்யா படைகளை தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து பாக்முட் பகுதியில் ரஷ்யப்படைகளின் தீவிரத் தாக்குதலால், அப்பகுதியில் இருந்து மக்கள் உக்ரைன் வீரர்களின் உதவியுடனும், நடைபயணமாகவும் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் 80 ஆயிரம் பேர் வசித்து வந்த பாக்முட் நகரில் தற்பொழுது 5000க்கும் குறைவானவர்களே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாக்மூட் நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டால், கிழக்கு உக்ரைனின் மற்ற நகரங்களுக்கு ஊடுருவ கூடும் என்பதால் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாகவும், உக்ரைன் படைகள் பாக்முட் நகரிலிருந்து பின்வாங்கபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine President Zelensky assured that Bhakmut will not retreat from the city


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->