பாக்முட் நகரில் நிலைமை மோசமாகி வருகிறது - உக்ரைன் அதிபர் - Seithipunal
Seithipunal


ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. தற்பொழுது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற ரஷ்யா படைகளை குவித்து வருகிறது.

இதில் உக்ரைனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா ஷெல் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் பகுதியின் பிரிவினைவாதத் தலைவர் டெனிஸ் புஷிலின், டொனெட்ஸ்க் பகுதியின் அனைத்து சாலைகளும் ரஷ்யா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், பாக்முட் நகரத்தில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், தங்களின் பாதுகாப்பு அரண்கள் அனைத்தையும் ரஷ்ய படைகள் முறியடித்து முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாக்முட் நகரத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine president says Situation in bakhmut is worsening


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->