மெக்சிகோ : கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பறிபோன 27 உயிர்.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ : கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பறிபோன 27 உயிர்.!

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து நேற்று அதிகாலை சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. 

இந்த பேருந்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் பேருந்து ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கடுட்டுப்பாட்டை இழந்து பள்ளத் தூக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் இருபத்தேழு பேர் உயிரிழந்தனர். மேலும், பதினேழு பேர் படுகாயமடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து  
27 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty seven peoples died for bus accident in mexico


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->