ஆப்கானிஸ்தானில் பரபரப்பு - ஓட்டலில் குண்டு வெடித்து 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் பரபரப்பு - ஓட்டலில் குண்டு வெடித்து 3 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் ஒரு ஹோட்டலில் நேற்று குண்டு வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தும், ஏழு பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தக் குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died for bomb explossion in afganisthan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->