வங்காளதேசம் || குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 17 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசம் || குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 17 பேர் பலி.!

வங்காளதேச நாட்டில் உள்ள பரிஸ்ஹல் மாகாணதின் பண்டாரியா நகரில் இருந்து அறுபது பயணிகளுடன் பேருந்து ஒன்று பரிஸ்ஹல் நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து ஜலாக்தி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையில் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த் அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர். 

இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். 

அதன் பின்னர் போலீசார் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆறு மற்றும் குளங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது குறிப்பிட்டதக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seventeen peoples died bus drowned in bangaladesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->