கரூரில் ரூ.100 கோடி நில மோசடி: முன்னாள் அமைச்சருக்கு வருமான வரித்துறையின் சம்மன்! - Seithipunal
Seithipunal


கரூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேருக்கு 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரை மேலக்கரூர் சார் பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்தார்.

இந்த வழக்கில் தன்னைச் சேர்க்கக்கூடும் என நம்பிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் கரூரில் இருந்து மறைந்துவிட்டார்.

வழக்கு தற்போது CBI கண்காணிப்பில் உள்ள CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை விரிவடைந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டன. நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், மேலும் 13 பேருக்கு எதிராக புதிய புகாரையும் அளித்துள்ளார்.

இதையடுத்து வாங்கல் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக, மே 23 அன்று விசாரணைக்காக விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Ex Minister IT Summon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->