புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் பிறந்ததினம்!.
The day Florence Nightingale was born
நவீன செவிலியத்துறையின் முன்னோடி, "விளக்கேந்திய சீமாட்டி" புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள்பிறந்ததினம்!.
செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.
இவர் 1850-ல் லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்யப் பேரரசுக்கும், பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

இரவில் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே இவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு இவரை விளக்கேந்திய நங்கை (The Lady with the Lamp) என்று நினைவில் வைத்திருக்கிறது.
இவர் 1883-ல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் தனது 90வது வயதில் 1910 ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
The day Florence Nightingale was born