வீட்டில் இருந்து விரட்டபட்ட சிறுமி - வாலிபர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் இருந்து விரட்டபட்ட சிறுமி - வாலிபர் செய்த கொடூரம்.!

அமெரிக்கா நாட்டில் உள்ள கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் கடந்த அக்.2 அன்று, ஒரு பெட்ரோல் பங்க் அருகே படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். 

பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிறுமி, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு மைக்கேல் செர்ரி என்ற நபரை கைது செய்து, விசாரித்தனர்.

அந்த விசாரணையில், ஐந்து வயது சிறுமியை அவரது தாயார் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதும், அடைக்கலத்துக்கு வழியில்லாமல் சிறுமி அப்பகுதியில் உள்ள வீடுகளில் உணவு பெற்று நாட்களை கழித்து வந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திய மைக்கேல் செர்ரியால் சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலைக்கு ஆளாக்கி உள்ளார். இதையடுத்து போலீசார் ஐந்து வயது சிறுமியின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for harassment to five years old girl in america


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->