தனிமையை தடுக்க தனி அமைச்சகம்.. தற்கொலையை குறைக்க நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் கடந்த சில மாதமாகவே தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர், கடந்த வருடத்தில் மட்டும் 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 2153 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை விட தற்கொலையால் அதிகளவு நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இவ்வாறாக தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தனிமையை அதிகளவு உணர்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், பெண்கள் அதிகளவு தனிமை பிரச்சனையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனால் ஜப்பான் அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனிமையை போக்குவதற்கு தனியொரு அமைச்சகம் அமைக்கப்பட்டது. இதனால் வரும் காலங்களில் தற்கொலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan Announce Separate Ministry Control Suicide


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->