இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல், இன்று அதிகாலை “ரைசிங் லயன்” என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

நாடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் மையம், அணு ஆயுத திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தாக்கப்பட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். தனது நாட்டுக்குப் போக்கும் அச்சுறுத்தலை முழுமையாக அழிக்கும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் சுமார் 100 டிரோன்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளது. இவை அனைத்தையும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறிக்க இஸ்ரேல் ராணுவம் முயன்று வருகிறது.

அவசர நடவடிக்கையாக, இஸ்ரேல் முழுவதும் வான்பரப்பு மூடப்பட்டு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஈரானும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, முப்படைத் தளபதி முகமது பாகெரி உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசு ஊடகம் தெரிவித்ததுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாகவும், இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் பதற்றம் மேலும் தீவிரமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel Iran drone attack 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->