சண்டை நிறுத்தம்: ஒன்றிய அரசுக்கு மாவோயிஸ்டுகள் கடிதம்..! - Seithipunal
Seithipunal


சட்டீஸ்கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​உள்ளார்.  இந்​நிலை​யில், வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று ஒன்றிய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக அறிவித்துள்ளார். அதன்​படி, மாவோ​யிஸ்ட் ஒழிப்​பு பணி​களில் உள்​ளூர் போலீசார், கோப்ரா கமாண்​டோக்​கள் மற்றும் சிஆர்​பிஎப் வீரர்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட இயக்கமாக மாவோ​யிஸ்ட் இருக்கிறது. இந்நிலையில், மத்​திய மாவோ​யிஸ்ட் செய்​தி தொடர்​பாளர் அப்ஹே என்​பவர், ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கடிதம் அனுப்​பி​யுள்​ளார். 

ஊடகங்​களில் வெளி​யாகியுள்​ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எங்​கள் ஆயுத போராட்​டத்தை ஒரு மாத காலம் நிறுத்தி வைக்​கிறோம் என்றும், இந்த கால கட்​டத்​தில் அரசு நியமிக்​கும் குழு​வினருடன் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறை​யில் அடைக்கப்பட்டுள்ள மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் இந்த பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க அனு​ம​திக்க வேண்​டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்​த கால கட்​டத்​தில் போலீசார் தங்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும், என்​க​வுன்ட்​டர் நடவடிக்​கையை நிறுத்தி வைக்க வேண்​டும் எனவும், அத்​துடன் அரசி​யல் கைதி​களை விடுவிக்க வேண்​டும் என்றும், குறித்த பேச்​சு​வார்த்தை அர்த்​த​முள்​ள​தாக நடக்க வேண்​டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடிதத்​துக்கு பதிலளிக்க வசதி​யாக இ-மெயில் முகவரியை​யும் அதில் அப்ஹே கொடுத்​துள்​ளார்.

இது குறித்து சட்டீஸ்கர் அதி​காரி​கள் கூறுகையில், 'மாவோ​யிஸ்ட்​கள் பலர் கொல்​லப்​பட்​ட​தால் அந்த அமைப்பு தற்​போது வலு​விழந்​துள்​ளது என்று தெரிவித்துள்ளார். ஆகவே, மாவோ​யிஸ்ட் அமைப்​பினரை மீண்​டும் ஒன்று கூட்​டு​வதற்​கும் சதி தீட்டு​வதற்​கும் வசதி​யாக அமைதி பேச்​சு​வார்த்தை என்ற பெயரில் நாடக​மாடு​கிறதோ என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது என்றும் கூறியுள்ளார். இது தவிர அமைதி பேச்​சு​வார்த்தை கடிதம் உண்​மை​யாக இருந்​தால், மிகப்​பெரிய மாற்​றம் நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது பற்றி, ஒன்றிய அரசு அதி​காரி​கள் கூறுகையில், 'மாவோ​யிஸ்ட்​கள் அமைதி பேச்​சு​க்கு முன்​வரு​வது வரவேற்​கத்​தக்​கது. இதில், மனித உரிமை ஆர்​வலர்​கள், சமூக சேவகர்​களை மத்​தி​யஸ்​தர்​களாக பயன்​படுத்​தலாம் என்று தெரிவித்துள்ளனர். எனினும், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நாடு முழு​வதும் மாவோ​யிஸ்ட்​கள், நக்​சல்​கள் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று ஒன்றிய அரசு அளித்​துள்ள உறு​தி​மொழி​யில் எந்த மாற்​ற​மும் இல்​லை என்று அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maoists write to unity government calling for peace talks


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->