இஸ்ரேல்–ஈரான் மோதல் தீவிரம்: ஏவுகணை தாக்குதல் - பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு! - Seithipunal
Seithipunal


அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தலைமை கட்டடங்களை குறிவைத்து, இஸ்ரேல் கடந்த இரவில் “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் ஈரானில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் படுகாயமடைந்ததாகவும், ஐநாவில் ஈரான் தெரிவித்தது.

இதற்கு பதிலடி அளிக்க, ஈரான் இன்று காலை “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவரும் ரிஷோன் லெசியோனில் இருவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 34 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதிலடி மோதல் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேல் வீசிய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிகிறது. இதன்மூலம் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை பல ஆண்டுகள் பின்னடையச் செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பதாவது, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 20 குழந்தைகள் உள்பட 800 பேர் காயமடைந்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Israel war


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->