ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டரான எஸ்பி அருண் திடீர் ராஜினாமா: ஏற்றுக்கொண்ட தமிழக அரசு..!
Tamil Nadu government accepts sudden resignation of Armed Forces SP Arun
தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று தமிழக அரசு அவரை காவல்துறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 2014-ஆம் ஆண்டு எஸ்பியாக அருண் பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டான்டாக அருண் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தன்னை பணியில் இருந்து விடுவிக்கும் படி, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ராஜினாமா கடிதத்தை எஸ்பி அருண் வழங்கியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தின் படி டிஜிபி மற்றும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து எஸ்பி அருண் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ஆயுதப்படை எஸ்பி அருண் விடுவிக்கப்பட்டு, அதற்கான கடிதம் அவரிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government accepts sudden resignation of Armed Forces SP Arun