கன்னியாகுமரியில் கனமழை எதிரொலி: கடல் சீற்றம்: கடற்கரையில் தடுப்புகள் அமைத்துள்ள போலீசார்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் தண்ணீர் அதிகமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி அங்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட அப்பகுதி பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும், கால்களை நனைக்க வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக கடற்கரையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police have set up barricades on the beach in Kanyakumari due to rough seas


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->