ரமணா பட பாணியில் கொடூரம்! தாய், குழந்தை உயிரிழப்பு மறைப்பு - மருத்துவமனைக்கு சீல்! மருத்துவர் கைது! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் குஷிநகரில், பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழந்ததை மறைத்து பணம் பறிக்க முயற்சித்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டும், மருத்துவர் கைது செய்யப்பட்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விப்ராந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்மா காத்தூன் (25) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என கூறப்பட்டது. ஆனால் பின்னர் ரத்த தேவைப்படுவதாக கூறி, உறவினர்களிடம் பணம் கேட்டனர்.

உண்மையில் அஸ்மா, அவரது குழந்தை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது உறவினர்களுக்கு பின்னர் தெரியவந்தது. இதை மறைத்தவையே பணம் கேட்டு மோசடி செய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மருத்துவர் சையத் தப்பிச் செல்ல முயன்ற போது பிடிபட்டார். போலீஸார் விசாரணையில் உண்மை தெரிய வந்தது. அரசு அனுமதி இல்லாமல் இயங்கியதால், மருத்துவமனை மூடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Mother baby death hospital closed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->