திடீர் திருப்பம்: இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் - ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் காட்டும் தீவிரம், இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறி, இஸ்ரேல் சில தினங்களுக்கு முன் ஈரான் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலாக, ஈரானும் இஸ்ரேலின் முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தியது.

இரு நாடுகளும் தொடர்ச்சியாக எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பெரும் மோதல் போர் ரீதிக்கு செல்வதற்கான அபாயம் உருவாகியுள்ளது. நிலைமை தீவிரமடைவதை கருத்தில் கொண்டு, இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால் ஈரான், “இது பேச்சுவார்த்தைக்குரிய தருணம் அல்ல” எனத் திட்டவட்டமாக மறுத்து, தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, “இஸ்ரேல் அணு ஆயுதம் பயன்படுத்தினால், அதற்கான பதிலாக பாகிஸ்தானைச் சேர்ந்த அணுகுண்டுகளை நாங்கள் பயன்படுத்துவோம்” என ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், அந்த அறிக்கையில் இடம்பெற்ற பாகிஸ்தான் தொடர்பான பகுதியை அந்நாட்டு அரசு மறுத்து, தங்களுக்குத் தொடர்பே இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Israel Pakistan nuclear warn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->