உ.பி.,யில் கனமழையால் பெரும் துயரம்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 25 பேர் பலி..!
25 people including children killed in lightning strikes in UP in 2 days
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில், 14 மாவட்டங்களில் கடந்த 02 நாட்களில், மின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அத்துடன், கடந்த 02 நாட்களில் மட்டும் 14 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, எட்டு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
25 people including children killed in lightning strikes in UP in 2 days