அரசியலில் 'முற்றுப்புள்ளி' என்பதே கிடையாது... ஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவம் நாட்டுக்குத் தேவை...! - பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி உரை
In politics no such thing full stop experience retiring MP needed nation pm Modi moving address
மாநிலங்களவையில் ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பேசிய பிரதமர் மோடி, அரசியலில் 'முற்றுப்புள்ளி' என்ற ஒன்றே கிடையாது என்றும், ஓய்வுபெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும் என்றும் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உரையாற்றிய அவர், மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், தேவ கவுடா போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்துள்ளதைப் பாராட்டிப் பேசினார்.
மேலும், சபை விவாதங்களில் ஒவ்வொரு உறுப்பினரின் தனித்துவமான பங்களிப்பையும் நினைவுகூர்ந்த பிரதமர், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மூத்த உறுப்பினர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் கற்க வேண்டியது ஏராளம் இருப்பதாகவும், பதவிக்காலம் முடிந்தாலும் இவர்களின் அனுபவமும் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று கூறி, ஓய்வுபெறும் உறுப்பினர்களின் அடுத்தகட்ட பயணத்திற்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
English Summary
In politics no such thing full stop experience retiring MP needed nation pm Modi moving address