'இந்திய கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது'; ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவு..! - Seithipunal
Seithipunal


அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில் இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் அதற்கு முரணாக கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; 

''ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பசிபிக் கடல் பகு​தி​யில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்​தப்​பட்ட 'செட்​டெபெல்​லோ' என்ற எண்ணெய் கப்பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து ஈரான் துறை​முகத்​துக்கு நுழைய முயன்​றது. இதில் இருந்த 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த கப்​பலுக்கு பிறப்​பித்த அறி​வுறுத்​தல்​களை பின்​பற்​றாமல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்க முயன்​ற​தாக அமெரிக்க ராணுவம் குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இதையடுத்து இந்த கப்​பலின் இன்​ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்​கியது. இதில் இந்​திய மாலுமிகள் ஆதித்ய சர்​மா, சிவானந்த் சவுரேஷி​யா, தலைமை பொறி​யாளர் பட்​னாலா சுரேஷ் ஆகியோர் உயி​ரிழந்​துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோ​வால் தனது எக்ஸ் தளத்​தில் கூறுகை​யில், ''செட்டோபெல்லோ என்ற எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்குதலில் இந்​திய மாலுமிகள் 03 பேர் உயி​ரிழந்​தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த துயர​மான நேரத்​தில் உயி​ரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்​கிறது. மீட்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் உடனடி​யாக நாடு திரும்​புவதை உறுதி செய்ய அதிகாரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். உயி​ரிழந்த மாலுமிகளின் உடல்​கள் இறுதிச் சடங்​கு​களுக்​காக உடனடி​யாக இந்​தியா கொண்டு வரப்​படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கப்​பல்​கள் மீது நடத்​தப்​படும் தாக்குதல் மிகுந்த கவலை​யளிப்​ப​தாக இந்​தி​யா குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இப்பகு​தி​யில் போர் பதற்​றம் உடனடி​யாக குறைய வேண்​டும் எனவும், வலி​யுறுத்​தி​யுள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்​து, இந்​திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்​கு தனது கடும்​ கண்​டனத்​தை தெரி​வித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் ஈரான் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

அதில், அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் வரைவில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானின் அடிப்படைக் கொள்கைளுக்கு உட்பட்டே அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான ஈரானின் உரிமை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்க வைத்துக்கொள்வது போன்ற விஷயங்கள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் நோக்கில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump posts on the social media platform Truth that the drone attack carried out by Iran on Indian ships is completely unacceptable


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->