உலக இரத்த கொடையாளர் தினம்..ஆர்வமுடன் இரத்த தானம் செய்த இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


உலக இரத்த கொடையாளர் தினத்தை  முன்னிட்டு  சின்ன அல்லாபுரம் கிராம இளைஞர்கள் 20பேர் இரத்த தானம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் உலக இரத்த கொடையாளர் தினத்தினை முன்னிட்டு வேலூர் இரத்த மையம், சின்ன அல்லாபுரம் பொதுமக்கள், பெரியோர்கள் இளைஞர்கள் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் மற்றும் இலவசல கண் பரிசோதனை முகாம் சின்ன அல்லாபுரம், களத்துமேடு திரெபதியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் இரா.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.  காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார்.கிராம நாட்டடாண்மை முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், செயலாளர் எல்.எஸ்.சரவணன், பொருளாளர் மணிகண்டன், உள்ளிட்ட 20பேர் இரத்த தானம் செய்தனர்.

வேலூர் இரத்த மையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஷ், உரிய இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டார்.  மேலும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமணையின் நிர்வாக அலுவலர் எம்.பில்தேவ் தலைமையில் குழுவினர் கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.வேலூர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் எம்.எம்.மணி, வேலூர் இரத்த மையத்தின்ஒருங்கிணைப்பாளர் கே.சிவன், பிரதாப் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசிார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Blood Donor Day Young people who donated blood with enthusiasm


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->