ரீலிஸ் மோகம்; முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த விஷ பாம்பு: உயிருக்கு போராட்டம்..!
Deadly snake bites tongue of man who tried to kiss it
உத்தரப் பிரதேசத்தில் கொடிய விஷமுள்ள பாம்பிற்கு முத்தமிட முயன்ற நபரின் நாக்கை அந்தப் பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.
உ.பி., மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹபைத்பூர் கிராமத்தை சேர்ந்த 50 வயதான விவசாயி ஜிதேந்திர குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சமூக ஊடகத்தில் புகழ் பெற வேண்டும் என்று எண்ணி, அதாவது, ரீல்ஸ் வீடியோ வெளியிடும் ஆசையில், ஒரு கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்து அதனுடன் இருந்தபடி வீடியோ எடுத்து படமாக்கியுள்ளார்.

அதனை அருகில் இருந்தவர்களும் வீடியோ எடுத்துள்ளனர். குறித்த வீடியோவில் அந்த நபர் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு அதன் தலை மீது வாயை நீட்டிய போது திடீரென அந்த பாம்பு அவரது நாக்கில் கொத்தியுள்ளது. இதை வீடியோ எடுத்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாம்பு கடிக்கு ஆளான நபரின் உடல்நிலை வேகமாக மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஐ.சி.யூ.,வில் உள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Deadly snake bites tongue of man who tried to kiss it