ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சலவைத்துறை கட்டிடம்.. அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்! - Seithipunal
Seithipunal


ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைத்துறை கட்டிடத்தை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி 10 -ஆவது வார்டில் ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைத்துறை (எ) டோபிகான கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில், திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி முன்னிலையில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில்  அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி உங்களை பயனாளிகளாக பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த நான்கு ஆண்டுகளில் 2 கோடியே 20 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 7 கோடியே 50 இலட்சம் நபர்கள் அரசு அறிவித்த ஏதாவது ஒரு திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். 

மேலும் இந்தப் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்கள்   பொருத்தவரை சலவைத் தொழிலாளர்கள் வசிக்கின்ற  எங்கள் பகுதிக்கு  சலவைத் துணிகளை துவைப்பதற்கு சலவைத் தொழில்  கட்டடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.  இந்த நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சலவைத் துறை (எ) டோபிக்கான கட்டடத்தினை திறந்து வைக்கப்பட்டு. மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 30 சலவைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.6700 மதிப்பிலான LPG  கூடிய சலவைப் பெட்டியினை வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார்.

இதில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் என்.தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி, நகர் மன்ற துணைத் தலைவர் ஆர். ஆனந்தி ரமேஷ், பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மனோகரன் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சலவை தொழிலாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With an estimated value of 40 lakhs the spending department building was inaugurated by Minister Nassar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->