பிலிப்பைன்ஸில் திடீர் நிலநடுக்கம்.!
earthquake in philipines
தென்கிழக்காசியாவின் தீவு நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ தீவை மையமாக கொண்டு சுமார் எழுபத்தெட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
திடீரென இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.