கனடா | இந்து கோவில்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! வருத்தத்தில் இந்தியா! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். 

காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகில் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவு உள்ளனர். இவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்து மிகவும் இந்தியா வருந்துகிறது. இதற்கு இடையே கனடாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. 

கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் வரை இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று இரவு லட்சுமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் கோவில் கதவில் ஜூன் 12ஆம் தேதி  நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கன்னடா விசாரணை நடத்தி வருகிறது என்ற போஸ்டரை ஒட்டி வைத்துள்ளது. 

மேலும் காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்தும் போஸ்டரை ஒட்டி வைத்துள்ளனர். கனடாவில் உள்ள சரி பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பாகும். 

டைகர் படத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவர் குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டார். 

இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada Hindu temple damaged


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->