செடார்ப்ளப்பில் 24 வயது வாலிபர் துப்பாக்கி சூடு...! குடும்பத்தினர் உள்பட 6 பேர் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம், செடார்ப்ளப் பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சூடு நடத்தி, 7 வயது சிறுமி உள்பட 6 பேரை கொன்ற சம்பவம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின்படி, ஆரம்பத்தில் தன் தந்தையையும் உட்பட 3 பேரை கொன்ற அவர் சம்பவ இடத்தை விட்டு தப்பினார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் அவரது 2 சகோதரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியார்.

மேலும், போலீசார் தீவிரமான தேடலின் பின்னர் 24 வயதான டாரிக்கா எம். மூர் என்ற நபரை கைது செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் குடும்பத்தினர் உடன் ஏற்பட்ட தகராறில் இப்படிப் பட்ட பயங்கரமான செயலுக்கு ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

தற்போது, டாரிக்கா எம். மூர் மீது முதல் நிலை கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்குமுன் அவர் மீது எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லை என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் மோசமான காரணங்கள் குறித்து விசாரணை தொடர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 year old man opens fire Cedar Bluff Six people including family members died


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->