மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி, 47 பேர் காயம் - Seithipunal
Seithipunal


வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் பசிபிக் கடற்கரை மாநிலமான நயாரிட்டில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து குவானாஜுவாடோவின் லியோன் நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் 47 பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேருந்தில் பயணித்த அனைவரும் குவானாஜுவாடோ பகுதியை சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 died and 47 injured in bus accident in mexico


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->