பரபரப்பு... கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி.!
14 peoples died for drink spurious liquor in punjab
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தின் ஐந்து கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றுக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாவது:- "பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு எங்களுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
14 peoples died for drink spurious liquor in punjab