வெள்ளியங்கிரி மலையேறி சிறுவன் உயிரிழப்பு..!!
15 years old boy died in velliyangiri hills
கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், விஸ்வா என்ற பதினைந்து வயது சிறுவன், தனது தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, சிறுவன் விஷ்வாவுக்கு 3-வது மலையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த சிறுவன் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்புகள் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
15 years old boy died in velliyangiri hills