அடுத்த 3 மணி நேரம்... 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை... வானிலை ஆய்வு மையம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகின்ற 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தேனி தென்காசி, கோயம்புத்தூர் திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next 3 hours thunderstorm lightning rain in 19 districts of tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->