உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! கனமழை எச்சரிக்கை!
low pressure area has formed in the Bay of Bengal
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரை பகுதியில் காணப்படுகிறது.
அடுத்த 24 மணிநேரங்களில் இந்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்கக் கரையோர பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூலை இன்று முதல் 29 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஜூலை 24-ஆம் தேதி, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 25-ஆம் தேதி ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதால் மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
low pressure area has formed in the Bay of Bengal