ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்: பட்டப்பகலில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி தாக்கிய விசிகவினர்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ள அண்ணாமலை ..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றம் அருகே, திருமாவளவனின் கார், தனது ஸ்கூட்டர் மீது, மோதியதை தட்டி கேட்ட வழக்கறிஞரை, வி.சி.க.,வினர் விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, வி.சி.க.,வின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அதனையடுத்து, மதியம் 02:30 மணியளவில் உயர்நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்ற போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது கார் மோதியுள்ளது.

இதனால், ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர் நிலை தடுமாறியுள்ளார். அத்துடன், அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, கார் அருகே சென்று, 'ஏன் இப்படி காரை ஓட்டி வருகிறீர்கள்' என கேட்க, திருமாவளவன் காரிலிருந்தவர்கள் கீழே இறங்கி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், வி.சி.க.,வினர் அவரை தாக்கிய போது அவர்களிடம் இருந்து அவர் தப்ப முயற்சித்துள்ளார். அப்போது விசிகவினர் அவரை ஓட ஓட விரட்டி தாக்கியதோடு, அவரது ஸ்கூட்டரை சேதப்படுத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த போலீசாரால் தடுக்க முடியவில்லை. அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி, 36, என்பது தெரிய வந்துள்ளது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலர் பார்வேந்தன், 'வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது மோதியதாகவும், பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது, நான் தடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன். அந்த நபரின் நோக்கம், திருமாவளவனை தாக்க வேண்டும் என்பதுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்துள்ளார்.

அத்துடன், அவரை கைது செய்யக்கோரி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் இருதரப்பு புகாரையும் பெற்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை, வி.சி.க.,வினர் விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவ்வாறு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'பட்டப்பகலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், வி.சி., கட்சியினர் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர், கார் டிரைவரை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ளார். அந்த காரில் வி.சி., தலைவர் திருமாவளவன் இருந்தார். அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்தில் இருந்து திரும்பி வந்த போது, அவரின் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது, மோசமான செயல். என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதற்கு தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking video of VKC members chasing and attacking lawyer in Thirumavalavan car crash case


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->