இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்து வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்களால் செய்திகளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் செயலிதான் வாட்ஸ்அப். மெட்டாவிற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான தவறான கணக்குகளை தடை செய்து உள்ளது. சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலியான வாட்ஸ்அப்களை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கீழ் இணங்கி, அதன் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது.

அதில் இந்த கணக்குகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்பே, முன்கூட்டியே தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WhatsApp has banned more than 65 lakh accounts in India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->