மேற்கூரை அமைக்கும் பணியின்போது பரிதாபம்.! 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் திருவிக நகர் பகுதியில் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜான் சேவியர் (37). இவர் நாகமாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளார். அப்பொழுது ஜான் சேவியர் 30 அடி உயரத்தில் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூறையில் இருந்த இரும்புக்கு கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜான் சேவியர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், ஜான் சேவியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth died after falling from a height of 30 feet in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->