86 ஆண்டுகளின் திரைப்படப் பயணம் முடிந்தது...! தயாரிப்பின் மாபெரும் மனிதர் AVM சரவணன் காலமானார்...!
86 years filmmaking journey come end AVM Saravanan great man production has passed away
ஏவிஎம் ஸ்டூடியோ உரிமையாளரும், தமிழ்த் திரைப்படத் துறையின் ஒரு புரளி நாயகனுமான தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு 86 வயது.
சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அவரது உடல் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோ 3வது தளத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசின் “கலைமாமணி” விருதும், புதுச்சேரி அரசின் “சிகரம்” விருதும் பெற்றவர்.தமிழ் சினிமாவின் தந்தைபோன்ற முன்னோடியான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் உருவாக்கிய ஸ்டூடியோவை, அவரது வாரிசாக சரவணன் தன்னிறைவோடு நடத்தி வந்தார்.
அவரது தலைமையில்,நானும் ஒரு பெண்,சம்சாரம் அது மின்சாரம்,சிவாஜி,வேட்டைக்காரன்,மின்சார கனவு,அயன்,உள்ளிட்ட பல தலைமுறைகளை கடந்து பேசப்பட்ட வரலாற்றுப் படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.
அவரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஒரு காலகட்டத்தின் முடிவு என அனைவரும் உணர்கிறார்கள்.நினைவுகள் நிறைந்த ஒரு பொற்காலத்தை பின்னால் விட்டு அவர் மறைந்தார்.
English Summary
86 years filmmaking journey come end AVM Saravanan great man production has passed away