போதையில் கவிஞர் வாலி எழுதிய பாட்டு...பாடல் மாஸ் ஹிட்! எந்த பாடல் தெரியுமா?
The song written by poet Vali while intoxicated the song is a mass hit Do you know which song
தமிழ் சினிமாவின் வரலாற்றில் வாலி என்ற பெயர் ஒரு தனி இலக்கிய உலகம். ஆனால், அவர் ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடல் எப்படி உருவானது தெரியுமா? அது யாரும் நம்ப முடியாத வகையில் குடி போதையில் எழுதப்பட்ட பாடல் தான்.
வாலி சினிமாவில் அறிமுகமான காலத்தில், ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் உச்சத்தில் இருந்தது. அந்த நிறுவனத்திற்காக பாடல் எழுத வேண்டும் என்பது வாலியின் மிகப்பெரிய ஆசை. ஆனால் அந்நேரத்தில் ஏவிஎம் படம் என்றாலே கண்ணதாசன் தான் பாடல் எழுதுவார். இதனால், சினிமாவில் ஐந்து ஆண்டு ஆன பின்னரும் வாலிக்கு அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒருநாள், எம். எஸ். விஸ்வநாதனின் ஸ்டூடியோவில் காலை வேளையில் வேறு ஒரு படத்திற்காக பாடல் எழுதிய வாலி, மதியம் என்ன ரெக்கார்டிங் எனக் கேட்டபோது—“ஏவிஎம் பட ரெக்கார்டிங்,”என்று எம்.எஸ்.வி சொன்னதும்,“அப்படியானால் நமக்கு வேலையில்லை தான்,”என்று எண்ணிய வாலி வீட்டிற்கு திரும்பி, மதியம் குடித்து, ஓய்வு எடுத்துக்கொண்டார்.
அதே நேரத்தில், ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் ஸ்டூடியோவிற்கு வந்து, அங்கு வாலி எழுதிய தெய்வத் தாய் படத்தின் பாடல்களை கேட்டார்.அந்த வரிகளை கேட்ட அவர் ஆச்சரியத்தில் மூழ்கி,“இந்த அளவுக்கு எழுதுபவர் யார்?”என்று எம்.எஸ்.வியிடம் கேட்டார்.
எம்.எஸ்.வி,“இவை எல்லாம் வாலி எழுதியதே,”என்று சொன்னதும்,மெய்யப்ப செட்டியார் உடனே முடிவு செய்தார்—
“சர்வர் சுந்தரம் படத்திற்கு அவசரமாக ஒரு பாடல் வேண்டும்… வாலியை அழைக்கவும்!”
அவர் அனுப்பிய உதவியாளர் நேராக வாலியின் வீட்டிற்கு வந்தார். போதையில் இருந்த வாலி இந்தச் செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து, உடனே குளித்து, அந்தப் போதே ஸ்டூடியோவிற்கு சென்றார்.அங்கு எம்.எஸ்.வி பாடல் சூழலை விளக்க, வாலி போதையிலேயே பேனாவை எடுத்தார்…
அந்த குடிபோதையில் பிறந்த கவித்துவ படைப்பு தான் —“அவளுக்கென்ன அழகிய முகம்…”இன்று கூட காலத்தைக் கடந்த evergreen பாடலாக இது மக்கள் மனதில் நிற்கிறது.இத்தகைய மெல்லிய உணர்வுப் பாடலை குடிபோதையில் எழுதியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் அதுவே நிகழ்ந்த உண்மையாகும்.
வாலியின் கவிதைத் திறமை, அவர் எந்த நிலைமையிலும் பாய்ந்து எழுவதைக் காட்டிய மிகச்சிறந்த உதாரணம் இதுவே.
English Summary
The song written by poet Vali while intoxicated the song is a mass hit Do you know which song