காதலியை பலருக்கும் விருந்தாக்கி சம்பாதித்த வாலிபர் - கையும் களவுமாக பிடித்த போலீசார்.!
youth arrested for harassment in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோரை எதிர்த்து தான் காதலித்தவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.
இதையறிந்த பாபு சிவேஷ் என்ற இளைஞர், அவரிடம் ஆறுதலாக பேசி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண், பாபு சிவேஷுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்று இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

இதையடுத்து பாபு சிவேஷ் தனது நண்பர் ரமேஷ் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் இருவரும் அந்த இளம்பெண்ணை மிரட்டி ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் அந்த பெண்ணை மிரட்டி மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், கோவை மற்றும் ஊட்டி என்று பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருக்கும் விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் அந்த இளம்பெண், பாபு சிவேஷிடம் இருந்து தப்பித்து வந்து தனக்கு நடந்த கொடுமைகளை உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார் இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் படி போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளியான பாபு பாபு சிவேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவின் நண்பர் ரமேஷ் என்பவர் உள்பட பெண்ணை பலாத்காரம் செய்த பலரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
youth arrested for harassment in coimbatore