திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய இன்ஜினியர்.! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய இன்ஜினியர்.!

அரியலுார் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கீழசிந்தாமணி பகுதி காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர் தா.பழூர் பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். 

இவரது உறவினரான தஞ்சை மாவட்டம் நெடுங்கொல்லை பகுதி காலனி தெருவை சேர்ந்த கலைச்செல்வி தா.பழுரில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது இவருக்கும் கார்த்திக்கும்  இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து கார்த்திக் கலைச்செல்வியை உடையார்பாளையத்தில் உள்ள தனது நண்பரான விஜய் என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், கலைச்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திக்கை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் கார்த்திக் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்ததனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கலைச்செல்வியை திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியும் திருமணம் செய்ய கார்த்திக் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் கலைச்செல்வியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for harassment case in jeyankondam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->