இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கீழே விழுந்த வாலிபர் - டிராக்டர் மோதி பலி - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கீழே விழுந்த வாலிபர் மீது டிராக்டர் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கரூர் மாவட்டம் புதுகஞ்சமனூர் பகுதியை சேர்ந்தவர் டைலர் மாணிக்கம் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது புலியூர்-ஜெகதாபி சாலையில் லிங்கத்தூர் அருகே சென்ற போது எதிரே குளித்தலையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் கீழே விழுந்த மாணிக்கத்தின் மீது, அவ்வழியாக வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளியணை போலீசார், உயிரிழந்த மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman fell from a twowheeler was hit by a tractor in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->